ஆகாஷ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தி அதிர்ச்சி
ஆகாஷ் கொலை வழக்கின் விசாரணையில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சியளிக்கும் உத்தி வெளியிட்டுள்ளது. இதில், உடலை எடுக்க மறுத்தால் காவல்துறையை அடக்க கொள்ளலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
Published
15 Jun 2026
3 மாதங்களுக்கு முன்பு
Updated
3 Sep 2026
சிவகங்கை, மானாமதுரையில் காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த ஆகாஷ் டெலிசன் வழக்கில், மதுரை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 15) பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால், காவல்துறையே உடலை சட்டப்படி அப்புறப்படுத்த (டிஸ்போஸ்) உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை கொலை செய்தவர்களில் ஒருவரைக் கூட காவல்துறை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், CB-CID விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கருப்பு எழுத்துக் கழகம் (Black Letter Institute) கூறுகையில், "கொலை செய்தவர்களில் ஒருவரைக் கூட கைது செய்யாத நிலையில், உடலை வாங்க மறுப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உணர்வுரீதியான தற்காப்பு மட்டுமே. அப்படியிருக்க, 'உடலை இன்று மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் காவல்துறையே அடக்கம் செய்யும்' என்று உத்தரவிடுவது, பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றமே மிரட்டுவது போல உள்ளது. இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவரின் உடலை மீட்கும் உரிமையும், கண்ணியமான அடக்கம் செய்யும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உண்டு. கொலை செய்தவர்களை கைது செய்யாமல், உடலை அப்புறப்படுத்த உத்தரவிடுவது நீதிக்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளது.
FOLLOW NOW
X (Twitter): @karuppuTv
Facebook: /karuppuezhutthu
Whatsapp: https://whatsapp.com/channel/0029Vb85Sj9CcW4sZ5D8qf37
#ஆகாஷ் #காவல்மரணம் #CB_CID #உயர்நீதிமன்றம் #கருப்புஎழுத்துக்கழகம் #கருப்புநியூஸ்
கருத்துகள் (0)
கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion
கருத்து பதிவிட உள்நுழையவும் — log in