சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் குளம் மாயமானது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்தபோது, இந்த குளத்தை மண் அடித்து நிரப்பும் திட்டத்தை அறப்போர் இயக்கம் புகார் அளித்து தடுத்தது. அதன்பிறகு குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று டெண்டர் போடப்பட்டு, குளத்தின் அளவு சுருக்கப்பட்டு உள்ளே கான்கிரீட் நீச்சல் குளம் கட்டப்பட்டது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்தபிறகு, அதில் ஒரு மண்டபம் கட்ட டெண்டர் போடப்பட்டது. அதையும் அறப்போர் இயக்கம் கண்டுபிடித்து புகார் அளித்து தடுத்து நிறுத்தியது. அதன்பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தைப் பற்றியே மறந்து விட்டார்கள்.
அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை தற்போதைய TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 கன மீட்டர்) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருகுவதற்கு TVK அரசு முயற்சி எடுக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
FOLLOW NOW
X (Twitter): @karuppuTv
Facebook: /karuppuezhutthu
Whatsapp: https://whatsapp.com/channel/0029Vb85Sj9CcW4sZ5D8qf37
#SivanKovilKulam #Valasaravakkam #ArapporIyakkam #Velumani #SekarBabu #TVK #HRandCE #CMOTamilnadu #TempleTank #WaterConservation #KaruppuNews
கருத்துகள் (0)
கருத்து பதிவிட உள்நுழையவும்